” திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது; காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராகத் தோன்றியது.”
– இராஜாஜி
“பலே பாண்டியா! பிள்ளை! நீர் ஒரு புலவன், ஐயமில்லை!”
– மகாகவி பாரதியார்
” தமிழ்நாட்டில் நாமக்கல் கவிஞரின் பெயர் மூலை முடுக்குகளிலும் பரவியிருக்கிறது. பண்டிதர், பாமரர் யாவரும் அவரைப் பாராட்டுகின்றனர். அவர் பேருள்ள எந்நாளும் எளிதில் ஏற்ற்றுக் கொள்ளப்படும்
இதற்கு ஒரு சான்று; அவருடைய நொண்டிச் சிந்துக் கென்று மட்டும் “ஆனந்த விகடன்” மற்ற வாரங்களை காட்டிலும் 5,000 பிரதிகள் அதிகமாக விற்றதாகத் தெரிகிறது.
– தமிழ்ப் பெரியார் திரு.வி.க
” நண்பர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் தமிழ் நாட்டின் இதயத்தைக் கவர்ந்தவர்களில் ஒருவர். தமிழர்கள் கூடிய கூட்டம் எதுவாக இருந்தாலும் அவர்களுடைய பாடல்களைப் பாடினால் உணர்ச்சியும் ஆவேசமும் இதயத்தைத் தாக்காமல் இராது. இது நாம் கண் கூடாகப் பார்த்த காரியம்!”
– ரசிகமணி டி.கே.சி
” நாமக்கல் கவிஞர் காந்தியடிகளின் கொள்கைகளுக்கு ஒரு கவிக்குரல் காந்தியத்தை இனிய கவிகளால் ஒலிக்கும் தமிழ்ச் சங்கு அவர். பாரதியார் வாக்கிலே தேசபக்க்தி என்னும் அனல் கவிதையாகப் பெருக்கெடுக்கிறதென்றால் நாமக்கல் கவிஞரது வாக்கிலே காந்தியக் கொள்கைகள் அலாதியான இசையுருப் பெறுகின்றன.”
– பே. தூரண்
சிந்தையினால் வர்க்கதனால்செய்கை தன்னால்
தேசத்திற் கோயது தொண்டு செய்தோன்;
முந்துமன்பே உருவாக வந்த மூர்த்தி
மூதறிஞன் காந்திமகான் வழிபின்பற்றி
செந்தமிழ்நாட் டாஸ்தானக் கவிஞனாகிச்
சீரோங்கு ராமலிங்க நண்பனே நீ
சந்தமும் இவ்வுலகில் வாழச் செந்தில்
சண்முகனை வேண்டிநிதம் போற்று வேனே”.
– கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
” படிக்காத பாமரரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய நடை, பாட்டை பாடுகிறவர்களைக் குழப்பி அல்லது திணரறடிக்காத புலமை, வரலாற்று உண்மைகளை மறக்காத வர்ணனை இவை அனைதனையும் ஒன்றுசேர்த்தே நாமக்கல் கவிஞரின் கவிதா மேதை”.
– டாக்டர் ம.பொ.சிவஞானம்.
நாமக்கல் கவிஞர் ஓர் அரிய கலைஞர்; தலை சிறந்த தேச பக்தர்; தேசத்துக்காகத் தியாகம் பல செய்தவர்; சிறைவாசம் புரிந்தவர். ஒழுக்கத்தில் உயர்ந்தவர்; நண்பர்களின் அன்பைக் கவர்ந்தவர்; கள்ளங்கபடமற்ற தூய உள்ளத்தினர்; புகழுக்கும் பொருளுக்கும் ஆசைபடாதவர்; ஆடம்பரத்தை அடியோடு வெறுப்பவர்; ‘ ஆடு ராட்டே! டின்றாடு ராட்டே’ என்று பாடி அந்தப் பாட்டின் மயக்கத்திலேயே தமிழ்நாட்டையே களிப்பால் சுழன்றாடச் செய்தவர். அவர் நீடுழி வாழ்க!”
– ஸ்ரீ கல்கி